செய்திகள்
சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி
சீனாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
பீஜிங்:
சீன நாட்டின் லியோனிங் மாகாணம் ஹூலுடோ நகரில் ஒரு ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ரசாயனம் தயாரிக்கும் இயந்திரத்தின் ஒரு அளகில் தீடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து காரணமாக தொழிற்சாலையில் தீ பற்றியது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ரசாயனம் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் தொழிற்சாலையின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் பலர் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 10 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனால் இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.