செய்திகள்
தாக்குதல் நடைபெற்ற பகுதி

பர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர் பலி

Published On 2020-01-29 11:52 GMT   |   Update On 2020-01-29 11:52 GMT
பர்கினோ பசோ நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 39 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்கடங்கு:

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் போகோ ஹரம், அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

கிராமங்களுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபடும் போகோ ஹரம் பயங்கரவாதிகள் அங்கு வசிக்கும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு அவர்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியும், உணவு பொருட்களையும் கொள்ளையடித்து செல்கின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கே அமைந்துள்ள சோவ்ம் மாகாணம் சில்ஹட்ஜி கிராமத்திற்குள் நுழைந்த போகோ ஹரம் பயங்கரவாதிகள் அங்கு வசித்துவந்த மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags:    

Similar News