செய்திகள்
ஆப்கானிஸ்தானில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் - டெல்லி, வடஇந்தியா, வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உண்டானது.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதி என்றழைக்கப்படும் இடத்தில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உட்பட்ட சில மாகாணங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நில அதிர்வு உண்டானது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதி என்றழைக்கப்படும் இடத்தில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உட்பட்ட சில மாகாணங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நில அதிர்வு உண்டானது.