செய்திகள்
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் (செக் குடியரசு காவல்துறை வெளியிட்ட படம்)

செக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி

Published On 2019-12-10 09:08 GMT   |   Update On 2019-12-10 09:08 GMT
செக் குடியரசு நாட்டில் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ப்ராக்:

ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் அழகிய சிறிய நாடு செக் குடியரசு. இந்நாட்டின் ஆஸ்ட்ரோவா நகரில் உள்ள மருத்துவமனையில் மர்மநபர் ஒருவர் இன்று காலை நுழைந்தார். அங்குமிங்கு சுற்றிய அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். 

இதனால் மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். அதன் பின்னர் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் மூலம் தப்பியோடிய அந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். 

மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆஸ்ட்ரோவா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News