செய்திகள்
கார் வெடிகுண்டு தாக்குதல்

சிரியாவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Published On 2019-11-24 04:57 GMT   |   Update On 2019-11-24 04:57 GMT
சிரியாவில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அப்யாட் பகுதியை துருக்கி படையெடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.  

துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் குர்திஷ் போராளிகள் , ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
 
இதற்கிடையே, சிரியா நாட்டின் டெல் அப்யாட் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கார் நேற்று திடீரென வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News