செய்திகள்
ஆற்றுக்குள் விழுந்த பஸ்

நேபாளம்: ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

Published On 2019-11-03 10:03 GMT   |   Update On 2019-11-03 10:03 GMT
நேபாளம் நாட்டின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் இன்று 34 பயணிகளுடன் சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
காத்மாண்டு:

நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி 34 பயணிகளுடன் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு பஸ்  புறப்பட்டது.

சிந்துபால்சவுக் மாவட்டத்தின் சுக்குட்டே என்ற பகுதி வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சன்கோஷி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.



தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஒரு சிறுமி, 4 பெண்கள் உள்பட 8 பேரின் பிரேதங்களை மீட்டுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News