செய்திகள்
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு (பழைய படம்)

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு -பள்ளிக்குழந்தைகள் 9 பேர் பலி

Published On 2019-11-02 10:10 GMT   |   Update On 2019-11-02 10:10 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பள்ளிக்குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பொது மக்கள் மீதும் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தகார் மாகாணத்தில் உள்ள தர்காட் மாவட்டத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பள்ளிக்குழந்தைகள் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதல்  தொடர்பாக வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News