செய்திகள்
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி

Published On 2019-10-28 02:47 GMT   |   Update On 2019-10-28 02:47 GMT
கொலம்பியா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர்.
போகோடா:

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் புறப்பட்டது.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், அந்நாட்டின் அல்பன் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கொலாம்பியா அதிபர் பயணிக்க அவ்வப்போது உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News