செய்திகள்
டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை நிராகரிக்க 52 சதவீதம் மக்கள் முடிவு: கருத்துக்கணிப்பு

Published On 2019-09-06 03:13 GMT   |   Update On 2019-09-06 05:42 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்கர்கள் முடிவு செய்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் மீண்டும்  குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட உள்ளார்.  ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியில் இருப்பார் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்வியோடு சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அமெரிக்க தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிடும் ராஸ்முசன் என்ற நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.

ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், 52 சதவீதம் பேர் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். 42 சதவீதம் பேர் மீண்டும் டிரம்பிற்கே வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளனர். 6 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்கை செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யவில்லை என கூறியுள்ளனர்.
Tags:    

Similar News