செய்திகள்
தைவான் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு
தைவான் நாட்டின் இலான் கவுண்டியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது.
தைபேய் :
தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது இலான் கவுண்டி. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் தைபேயிலும் கட்டிடங்கள் சில வினாடிகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் உயிர்ச்சேதம் எதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.