செய்திகள்
துருக்கி விமானப்படை

துருக்கி விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 7 பேர் பலி

Published On 2019-08-06 16:58 GMT   |   Update On 2019-08-06 17:01 GMT
ஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 7 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்:

ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், ஈராக் நாட்டின் ஹாரா மாகணத்தில் குர்திஸ்தான் பயங்கரவாதிகளை குறிவைத்து துருக்கி நாட்டின் விமானப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 குர்திஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.  

Tags:    

Similar News