செய்திகள்

கொழும்பை தகர்க்க மீண்டும் சதி: ராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்த திட்டம் - இலங்கை அரசு எச்சரிக்கை

Published On 2019-04-29 11:20 GMT   |   Update On 2019-04-29 11:20 GMT
கொழும்புவில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts

கொழும்பு:

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் மந்திரிகள், எம்.பி.க்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளது.

அந்த எச்சரிக்கை தகவலில், “பயங்கரவாதிகள் வேன்களில் குண்டுகளை நிரப்பி வந்து வெடிக்க திட்ட மிட்டுள்ளனர். ராணுவ உடையில் வரும் பயங்கரவாதிகள் இந்த கைவரிசை காட்ட உள்ளனர். எனவே உஷாராக இருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.


இலங்கையில் 2 இடங்களில் இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக அந்த எச்சரிக்கை தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் ஒரு இடம் மட்டகளப்பு என்று தெரிய வந்துள்ளது. மற்றாரு இடம் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் பயங்கரவாதிகள் கொழும்பை தகர்க்கும் வகையில் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. இதனால் கொழும்பில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News