செய்திகள்

சவுதி தூதரக அதிகாரியை கொன்றவருக்கு வங்காளதேசத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்

Published On 2019-03-04 10:36 GMT   |   Update On 2019-03-04 12:29 GMT
வங்காளதேசத்தில் சவுதி அரேபியா நாட்டு தூதரக அதிகாரியை கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Bangladeshexecutes #Saudiembassy #Saudiembassyofficial
டாக்கா:

வங்காளதேசம் நாட்டுக்கான சவுதி அரேபியா தூதரகத்தில் பணியாற்றி வந்தவர் கலாப் அல் அலி(45). வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள குல்ஷான் பகுதியில் கடந்த 6-3-2012 அன்று ஒரு கும்பலால்  கலாப் அல் அலி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு டாக்கா விரைவு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் 4 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட ஒரே குற்றவாளியான சைபுல் இஸ்லாம் மாமுன் என்பவருக்கு காசிப்பூரில் உள்ள மத்திய சிறையில் நேற்றிரவு 10 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Bangladeshexecutes  #Saudiembassy #Saudiembassyofficial
Tags:    

Similar News