செய்திகள்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதம் - ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி

Published On 2018-11-30 14:25 GMT   |   Update On 2018-11-30 14:25 GMT
அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார். #G20summit #Modi #XiJinping
புய்னோஸ் எய்ரேஸ்:

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
 
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாதமும், முற்போக்குத் தன்மையும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi #XiJinping
Tags:    

Similar News