செய்திகள்

அந்தமான் தீவுகளில் 5.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

Published On 2018-10-01 14:54 GMT   |   Update On 2018-10-01 14:54 GMT
அந்தமான் தீவுகளில் இன்று மாலை சுமார் 7 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. #Earthquake #AndamanIslands
அந்தமான்:

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக 6 மணி 54 நிமிடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #Earthquake #AndamanIslands
Tags:    

Similar News