செய்திகள்

இந்தோனேசியாவில் பூகம்ப பலி 387 ஆக உயர்வு

Published On 2018-08-11 08:03 GMT   |   Update On 2018-08-11 08:03 GMT
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயிர்ந்துள்ளது. #Indonesia #earthquake
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் லோம்போக் தீவில் கடந்த 5-ந்தேதி 6.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பூகம்பம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும் மீட்பு பணி இன்னும் முடியவில்லை. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 13 ஆயிரம் பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரோட்டோரத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். #Indonesia #earthquake
Tags:    

Similar News