செய்திகள்

இம்ரான்கான் கட்சியில் 3-வது மனைவியின் மகள்

Published On 2018-08-07 08:19 GMT   |   Update On 2018-08-07 08:19 GMT
இம்ரான்கானின் 3 வது மனைவியான புஷ்ரா மனேகாவின் மகள் மெஹ்ரு ஹயாத் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். #Imrankhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அக்கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

சமீபத்தில் அவர் தனது மத ஆலோசகர் புஷ்ரா மனேகாவை 3-வது திரு மணம் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணமானவர். 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் புஷ்ரா மனேகாவின் மகள் மெஹ்ரு ஹயாத் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். அவருடன் மேலும் 2 பேர் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த மெஹ்ரு கூறும்போது, நாட்டில் நடைபெறும் குற்றங்களை களைய பாடுபடப் போவதாக தெரிவித்தார்.

இவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பும் நிலை உள்ளது. ஏனெனில் இம்ரான்கான் தனது கட்சியில் தகுதி அடிப்படையில்தான் பதவி வழங்கி வருகிறார். தேவையின்றி உறவினர்களுக்கு பதவி வழங்குவதையும், வாரிசு முறை தலைமையையும் அவர் எதிர்த்து வருகிறார். #Imrankhan
Tags:    

Similar News