செய்திகள்

மங்கோலிய அதிபருடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு

Published On 2018-06-24 10:33 GMT   |   Update On 2018-06-24 10:33 GMT
3 நாள் அரசு முறை பயணமாக மங்கோலியா சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மங்கோலிய அதிபர் பட்டுக்லாவை சந்தித்து பேசினார். #RajnathSingh #Mongolia
உல்லன்பாட்டர்:

ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அரசு முறை பயணமாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மங்கோலியா நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இந்தியாவின் நிதி உதவியுடன் துவங்க உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் துவக்க விழாவில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து மங்கோலியா நாட்டின் அதிபர் பட்டுக்லாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், அந்நாட்டின் பிரதமர் குரேல்சுக், துணை பிரதமர் எண்டுவ்ஷின் மற்றும் உள்துறை மந்திரி நியாம்டோர்ஜ் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.



மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாரம்பரிய மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என இருநாடுகளுக்கு இடையே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மங்கோலியாவில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி புறப்பட்டார். #RajnathSingh #Mongolia
Tags:    

Similar News