செய்திகள்

அமெரிக்கா பல்கலைகழக துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம்

Published On 2018-02-23 15:10 GMT   |   Update On 2018-02-23 15:10 GMT
அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு லூசியான பல்கலைகழகத்தில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர். #SoutheasternLouisianaUniversityShooting #Hammond

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு லூசியான பல்கலைகழகத்தில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் ஹம்மாண்ட் நகரில் தென்கிழக்கு லூசியான பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழக வளாகத்தினுள் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 2 மணியளவில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தென்கிழக்கு லூசியான பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சமபவத்தினால் தற்போது எந்த பாதிப்பும் இல்லை எனவும், வழக்கம் போல கல்லூரி இயங்கும் எனவும் கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. #SoutheasternLouisianaUniversityShooting #Hammond #tamilnews
Tags:    

Similar News