செய்திகள்

சீனாவில் வீட்டில் பணம் திருடிய மகனுக்கு தாய் கொடுத்த நூதன தண்டனை

Published On 2018-01-21 07:27 GMT   |   Update On 2018-01-21 07:27 GMT
சீனாவில் வீட்டில் பணம் திருடியதால் மோட்டார் சைக்கிளின் பின்னால் கையை கயிற்றால் கட்டி தாய் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெய்ஜிங்:

சீனாவில் ‌ஷயோடாங் பகுதியில் உள்ள லுடியான் கவுன்டி என்ற இடத்தில் ஒரு தாய் தனது இளைய மகனை மோட்டார் சைக்கிளின் பின்னால் கயிற்றால் கையை கட்டி இழுத்துச் சென்றார். கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் கதறி அழுதபடி இருந்தான்.

இக்காட்சியை ஒருவர் தனது செல்போனில் வீடியோ ஆக எடுத்தார். பின்னர் அது இணையதளத்தில் வைரலா பரவியது. அதைத் தொடர்ந்து போலீசார் சிறுவனின் தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது “தனது மகள் வீட்டில் இருந்து சுமார் ரூ.20 ஆயிரத்தை திருடி விட்டான். அதை ஏன் திருடினாய். எப்படி செலவு செய்தாய் என கேட்டபோது அவன் பதில் சொல்ல மறுத்து விட்டான்.

அந்த பணம் எனது கணவன் ஒருமாத சம்பளத்துக்கு இணையானது என்றார். மேலும் பணம் குறித்து பதில் கூறாத தனது மகனை இன்னும் 2 அல்லது 3 நாட்கள் இதுபோன்று செய்யப்போகிறேன்” என மிரட்டினார்.

இனிமேல் அதுபோன்று செய்யக்கூடாது. வார்த்தைகளால் மிரட்டினால் போதும் என அவருக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News