செய்திகள்

சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

Published On 2018-01-21 06:18 GMT   |   Update On 2018-01-21 06:18 GMT
சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாண்டிகோ:

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 110 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு அண்டை நாடான பெருவிலும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Tags:    

Similar News