என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சிலி
நீங்கள் தேடியது "சிலி"
- சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு.
- 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.
சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹூடாகோண்டோ என்ற சிறிய நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டபோது 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் கிறிஸ்டியன் சலாசர் கூறும்போது, இது தனது அனுபவத்தில் இதுவரை இல்லாத ஒன்று என்றும், 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்தடங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது மிகப்பெரிய திட்டத்தின் தொடக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
விண்வெளியை பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய உலகின் அதி நவீன தொலைநோக்கி சிலி நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.
சிலி :
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’, வருகிற 2024-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி, விண்ணியல் ஆய்வாளர்களால் பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.
சிலி மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இந்த ஒரு பில்லியன் டாலர் செயல்திட்டத்துக்கான அடிப்படைப் பணிகளை சமீபத்தில் தொடங்கிவிட்டனர்.
புதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே தொழிலாளர்கள் பாறைப் படுகையில் 23 அடி துளைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவை காங்கிரீட்டினால் நிரப்பப்பட்டு, தொலைநோக்கிக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
அட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பகுதி, பூமியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று. எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தைக் கவனிக்க முடியும் என நம்பப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’, வருகிற 2024-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி, விண்ணியல் ஆய்வாளர்களால் பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.
சிலி மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இந்த ஒரு பில்லியன் டாலர் செயல்திட்டத்துக்கான அடிப்படைப் பணிகளை சமீபத்தில் தொடங்கிவிட்டனர்.
புதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே தொழிலாளர்கள் பாறைப் படுகையில் 23 அடி துளைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவை காங்கிரீட்டினால் நிரப்பப்பட்டு, தொலைநோக்கிக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
அட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பகுதி, பூமியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று. எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தைக் கவனிக்க முடியும் என நம்பப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X