செய்திகள்

சிங்கப்பூரில் பஸ்சில் பெண்ணிடம் குறும்பு: இந்திய என்ஜினீயருக்கு ஜெயில்

Published On 2017-12-15 06:26 GMT   |   Update On 2017-12-15 06:27 GMT
சிங்கப்பூரில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த இந்திய என்ஜினீயருக்கு 3 வாரம் ஜெயில் தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிங்கப்பூர்:

இந்தியாவை சேர்ந்தவர் பிரபு நடராஜன்(33). இவர் சிங்கப்பூரில் சாவோ சாங் பகுதியில் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

இவர் பஸ்ஸில் பயணம் செய்த போது 23 வயது பெண்ணிடம் தொடர்ந்து ‘செக்ஸ்’ குறும்பில் ஈடுபட்டார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.

எனவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். பகுதிநேர ஆசிரியை ஆக இருக்கிறார். இரவில் தூங்கும்போது ஜன்னல் வழியாக கைவிட்டு அவரிடம் பிரபு நடராஜன் ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து இருப்பதும் தெரிய வந்தது. அதையடுத்து அவரை போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.

அவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 3 வாரம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Tags:    

Similar News