என் மலர்

    நீங்கள் தேடியது "Singapore"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
    • வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் டமாஸ்கஸ், திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    நியூயார்க்:

    எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

    உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.

    இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.
    • பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது.

    இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது.

    முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கற்றல் - கற்பித்தல் - களப்பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழிவகுத்துள்ளது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர்குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் மாணவர்களை ஆளுமைத்திறன் பயிற்சி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக ஆயத்தப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சிங்கப்பூரை சேர்ந்த ஏஸ் பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தினை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார்.

    சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஸ் பன்னாட்டுக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனத்துடனான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் மற்றும் ஏஸ் நிறுவன செயல்இயக்குநர் டாக்டர் இராமதாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கற்றல் - கற்பித்தல் - களப்பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழிவகுத்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரில் பயிலும் மாணவர்களுக்கு நவீனச்சூழலுக்கு ஏற்ப ஆளுமைத்திறன் மற்றும் தலைமைத்துவப்பயிற்சி, மேலாண்மைக் கூறுகளில் பயிலரங்கங்கள் ஆகியவை இதன்வழி நடத்தப்பட உள்ளன.

    மேலும் இருதரப்பு ஆசிரியர்களுக்கான கருத்தரங்கப் பங்கேற்பு வாய்ப்புகள் மற்றும் புத்தொளிப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பெறும் என்று இந்நிகழ்வில் பங்கேற்ற துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிங்கப்பூர் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
    • ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றி.

     பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது.
    • மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சிறப்பு பீர் தயாரிக்கப்படுகிறது

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.

    சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.

    நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிங்கப்பூரில் தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், காதலியை தாக்கிய இந்தியருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர்வாழ் இந்தியர் முகமது முஸ்தபா அலி (வயது 24). இவருக்கும், சாகிக்கா நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல். ஆனால் நதியா, முன்பு இன்னொருவரை காதலித்து உள்ளார்.

    இந்த நிலையில் நதியாவின் முதல் காதல் தொடர்பாக அவருக்கும், முகமது முஸ்தபா அலிக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முகமது முஸ்தபா அலி, கர்ப்பமாக இருந்த தனது காதலியை முதுகிலும், தொடையிலும் சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தினார்.

    இது தொடர்பான புகாரின்பேரில் முகமது முஸ்தபா அலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்த வழக்கை சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி மேத்யூ ஜோசப் விசாரித்தார். விசாரணை முடிவில், முகமது முஸ்தபா அலி குற்றவாளி என கண்டார். தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், அவரை முகமது முஸ்தபா அலி தாக்கியது மிக மோசமான செயல் என விமர்சித்த நீதிபதி அவருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியா - சிங்கப்பூர் முதல் ஹாக்கத்தான் போட்டியில் 6 குழுக்களை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு இன்று பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். #PMModi #Hackathon
    சிங்கப்பூர்:

    இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படும் மக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு உலக அளவிலான பங்கேற்புடன் ஹாக்கத்தான் போட்டியை நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.  

    உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கத்தான்களின் ஒன்றாக கருதப்படும் மூவ் ஹாக் 10 குறிக்கோள்களை முன்வைத்துள்ளது.  இது மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.  ஒன்று இணையத்தில் பதிவு செய்வது, இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் முதலாவது போட்டி, புதுடெல்லியில் இறுதிப் போட்டி என்பது இந்தப்படி நிலைகளாகும்.

    ஹாக்கத்தான் விருது பெற அங்கீகரிக்கப்படும் 10 வெற்றியாளர்கள் உள்ளிட்டோருக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படும்.

    முதல்முறையாக இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற குழுக்களில் இந்தியாவை சேர்ந்த 3 குழுக்களும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுக்களும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் சிங்கப்பூரில் தொடந்து 36 மணிநேரம் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியாவை சேர்ந்த 3 குழுவினரும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுவினரும் வெற்றியாளர்களாக இறுதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதலிடம் பெற்ற குழுவினருக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும், இரண்டாவது இடத்தை பிடித்த  குழுவினருக்கு 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும்,  மூன்றாவது இடத்தை பிடித்த குழுவினருக்கு 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
        
    இந்நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற வெற்றியாளர்களை இன்று சந்தித்து பரிசுகளை வழங்கியதுடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.



    இந்தியா - சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தேசிய சாரண இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் மாற்று நாடுகளை கண்டுவரும் திட்டத்தின்கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ள சாரண இயக்கத்தினரையும் மோடி சந்தித்து உரையாடினார்.

    மேலும், இன்று காலை சிற்றுண்டி விருந்தின்போது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களையும் மோடி சந்தித்தார். அவர்களுடன் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.  #PMModi #Hackathon 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். #Singapore #Modi #India
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் நிதிச்சேவை தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ‘பின்டெக்’ மாநாடு நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் நிறுவனங்களும், 30 ஆயிரம் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இதேபோல் சிங்கப்பூரில் கிழக்காசிய நாடுகளின் 13-வது உச்சி மாநாடும் நடக்கிறது.

    இவற்றில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார். நேற்று அவர் பின்டெக் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது:-

    உலக பொருளாதாரத்தின் வடிவம் இன்று வேகமாக மாறி வருகிறது. புதிய உலகின் போட்டியாகவும், ஆதிக்க சக்தியாகவும் தொழில் நுட்பம் திகழ்கிறது. இது, மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பை தருகிறது. மக்களை பொருளாதார ரீதியாகவும் உயர்த்துவதுடன் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துகிறது.

    இந்தியாவில் தற்போது மின்னணு தொழில் புரட்சி நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய கிராமங்கள் வளர்ச்சி திட்டங்களால் பெரும் மாற்றம் கண்டுள்ளன. கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் 130 கோடி மக்களில் 120 கோடி பேருக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் (ஆதார்) வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் மின்னணு பரிமாற்றமும் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கிடைத்து இருக்கிறது. ஏனென்றால் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு மின்னணு பரிமாற்ற முறையில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது.

    உலகில் அதிக தகவல் பகிர்வு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த தகவல் பகிர்வுக்கு மிகக் குறைந்த செலவே ஆகிறது. மேலும் தொழில் நுட்பத்துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த நாடாகவும் இந்தியா திகழ்கிறது. எனவே தொழில் நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொடங்கி ஆகிய திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நேற்று காலை மோடி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் பிராந்திய பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

    இதேபோல் கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சையும் அவர் சந்தித்து பேசினார். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை தோற்கடித்தார். #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka
    சிங்கப்பூர்:

    மொத்தம் ரூ.51 கோடி பரிசுத்தொகைக்கான பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.  #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp