செய்திகள்

இந்தோனேசியா: கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலி

Published On 2017-11-29 10:57 GMT   |   Update On 2017-11-29 10:57 GMT
இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவுப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நகரெங்கும் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பலியானதாக பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக ஜாவா தீவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஏற்கனவே, பாலி தீவில் எரிமலை வெடித்ததன் காரணமாக விமான சேவை தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News