செய்திகள்

மன்மோகன் சிங் மரணம் என இலங்கை அமைச்சர் பெயரில் டுவீட் - மர்மநபர்கள் விஷமச் செயல்

Published On 2017-05-25 18:02 GMT   |   Update On 2017-05-25 18:03 GMT
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மரணம் என இலங்கை வெளியுறவு மந்திரி பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கில் மர்ம நபர்கள் விஷமமாக பதிவு செய்துள்ளனர்.
கொழும்பு:

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மரணம் என இலங்கை வெளியுறவு மந்திரி பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கில் மர்ம நபர்கள் விஷமமாக பதிவு செய்துள்ளனர்.

இலங்கை வெளியுறவு மந்திரியாக பொறுப்பு வகிப்பவர் ரவி கருனநாயகே, இவர் பெயரில் டுவிட்டரில் 3-க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் உள்ளன. இந்நிலையில், அவரது பெயரில் உள்ள போலி கணக்கில் இருந்து இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணமடைந்ததாக டுவிட் செய்யப்பட்டிருந்தது.

மேலும், அந்த டுவீட்டில் அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளரை டேக் செய்திருந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த ரவி அந்நாட்டு சி.ஐ.டி போலீசாரிடம் புகாரளித்தார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட டுவீட் நீக்கப்பட்டது. இந்த விஷம செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரவி கருனாநாயகே அந்நாட்டின் நிதி மந்திரியாக இருந்து, தற்போது தான் வெளியுறவு மந்திரியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றதும் முதல் தலைவலியாக மர்ம நபர்களின் இந்த அடாவடி செயல் அவரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
Tags:    

Similar News