செய்திகள்

கைவிடப்பட்ட அகதிகளின் மகன் நான்: போப் பிரான்சிஸ்

Published On 2017-04-27 00:04 GMT   |   Update On 2017-04-27 00:04 GMT
கனடா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் கைவிடப்பட்ட அகதிகளின் மகன் தான் என்று தெரிவித்துள்ளார்.
ரோம்:

போப் பிரான்சிஸ் கனடாவின் வங்கவுவெர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களுடைய எதிர்காலம் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அப்போது பிரான்சிஸ் பேசியதாவது:-

என்னை பொறுத்தவரையில் ஒரு அகதிகளின் குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை மற்றும் தாத்தா, பாட்டி இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள், அவர்கள் அர்ஜெண்டினாவுக்கு சென்றுவிட்டார்கள். அங்கு அவர்கள் ஏதும் அற்றவர்களை சந்தித்தனர். கைவிடப்பட்ட அகதிகளின் மகன் தான்.



அதனால் தான் என்னை நானே ஆழமாக கேட்டுக் கொள்கிறேன். ஏன் அவர்கள், நான் இல்லையா? நாம் மட்டும் தான் ஒருங்கிணைந்து உடன் நிற்பதன் மூலம் அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஒவ்வொருவருக்கும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

Similar News