செய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சீல் வைப்பு: மர்ம பெட்டி கண்டெடுப்பால் பதற்றம்

Published On 2017-03-28 17:13 GMT   |   Update On 2017-03-28 17:13 GMT
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி கண்டெடுக்கப்பட்டது. இதனால் வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா ரகசிய போலீஸ் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை சற்று தொலைவிற்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே மர்மமான பெட்டி அகற்றப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கலிபோர்னியாவை சேர்ந்த அவர் கையில் தண்டாயுதம் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மிக்கி பென்ஸ் ஆகியோர் வெள்ளைமாளிகையின் உள்ளே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News