செய்திகள்

சீனாவில் மின் உற்பத்தி நிலைய நடைமேடை சரிந்த விபத்தில் 9 பேர் பலி

Published On 2017-03-25 08:40 GMT   |   Update On 2017-03-25 08:40 GMT
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இயங்கிவரும் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று நடைமேடை சரிந்த விபத்தில் 9 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீஜிங்:

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இயங்கிவரும் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று நடைமேடை சரிந்த விபத்தில் 9 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.



சீனாவின் குவாங்டாங் மாகாண தலைநகரான குவாங்ஸோ நகரில் அரசுக்கு சொந்தமான அனல் மின்சார உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஏழாவது உற்பத்தி அலகை விரிவாக்கம் செய்யும் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இங்குள்ள ஒரு நடைமேடை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய ஒன்பது பணியாளர்கள் உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Similar News