செய்திகள்
சிரியாவில் பள்ளி மீது அமெரிக்க ஆதரவு படைகள் குண்டு வீச்சு - 33 பேர் பலி
சிரியா நாட்டிலுள்ள அல்-மன்சோரா நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின்மீது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற விமானப் படை நடத்திய தாக்குதலில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:
சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின் அல்-மன்சோரா நகரில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின்மீது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற விமானப் படை நேற்று நடத்திய தாக்குதலில் 33 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
பலியானவர்கள் அனைவரும் உள்நாட்டுப் போருக்கு பயந்து அலெப்போ மற்றும் ரக்காவின் பிறபகுதிகளில் இருந்து அடைக்கலம் தேடிவந்து, இந்த பள்ளியில் தங்கி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின் அல்-மன்சோரா நகரில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின்மீது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற விமானப் படை நேற்று நடத்திய தாக்குதலில் 33 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
பலியானவர்கள் அனைவரும் உள்நாட்டுப் போருக்கு பயந்து அலெப்போ மற்றும் ரக்காவின் பிறபகுதிகளில் இருந்து அடைக்கலம் தேடிவந்து, இந்த பள்ளியில் தங்கி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.