செய்திகள்
போதை பொருள் சோதனை: குரைத்த நாய்களை சுட்டுக்கொன்ற போலீசார்
அமெரிக்காவில் போதை பொருள் சோதனையின் போது குரைத்த நாய்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
மிக்சிகன்:
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பேட்டில் கிரீக் பகுதியில் மார்க் மற்றும் செரில் பிரவுன் ஆகியோர் வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அங்கு 3 போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அங்கு வீட்டில் வளர்க்கப்பட்ட 3 நாய்களை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து மார்க் மற்றும் செரில் பிரவுன் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நாய்கள் போலீஸ் அதிகாரிகளை பார்த்து குரைத்து அவர்கள் மீது பாய்ந்தன. இதனால் அவற்றை போலீசார் ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பேட்டில் கிரீக் பகுதியில் மார்க் மற்றும் செரில் பிரவுன் ஆகியோர் வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அங்கு 3 போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அங்கு வீட்டில் வளர்க்கப்பட்ட 3 நாய்களை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து மார்க் மற்றும் செரில் பிரவுன் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நாய்கள் போலீஸ் அதிகாரிகளை பார்த்து குரைத்து அவர்கள் மீது பாய்ந்தன. இதனால் அவற்றை போலீசார் ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டுள்ளது.