செய்திகள்

கச்சத்தீவில் நடக்க இருந்த அந்தோணியார் ஆலய திருவிழா ஒத்திவைப்பு: இலங்கை அரசு அறிவிப்பு

Published On 2016-12-06 05:45 GMT   |   Update On 2016-12-06 05:45 GMT
கச்சத்தீவில் நாளை நடக்க இருந்த அந்தோணியார் ஆலய திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கொழும்பு:

கச்சத்தீவில் புனரமைக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நாளை(7ம் தேதி) நடைபெறவிருந்தது.

இந்நிலையில், கச்சத்தீவில் நாளை நடக்க இருந்த அந்தோணியார் ஆலய திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவையொட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கச்சத்தீவில் நடைபெறவிருந்த புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பது தொடர்பாக சிக்கல் நிலவி வந்தது.

கச்சத்தீவில் புனரமைக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

Similar News