செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி

Published On 2016-12-02 22:44 GMT   |   Update On 2016-12-02 22:44 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தலிபான்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. தலிபான்களும் அவ்வபோது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 23 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.

கந்தகர் மாவட்டத்தில் உள்ள நெஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈடுபட்டனர்

முன்னதாக தெற்கு ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு போலீசார் நடத்திய தாக்குதலில் 29 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கைக்காக இந்த பதில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 23 பேரில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இருந்தனர்.

Similar News