செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்களின் சிறைக்காவலை டிசம்பர் 9 வரை நீட்டித்து இலங்கை கோர்ட் உத்தரவு

Published On 2016-11-28 10:09 GMT   |   Update On 2016-11-28 10:09 GMT
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரின் சிறைக்காவலை டிசம்பர் 9-ம் தேதிவரை நீட்டித்து இலங்கை கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு:

தங்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்களை கடந்த 19-ம் தேதி கைதுசெய்த இலங்கை கடலோரக் காவல் படையினர், மீனவர்களுக்கு சொந்தமான இருபடகுகளையும் பறிமுதல் செய்தனர்.

ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 11 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி அளித்த விசாரணை காவல் காலம் இன்றுடன் முடிந்ததால் இன்று 11 மீனவர்களும் ஊர்க்காவல்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களின் காவலை வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதிவரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

Similar News