செய்திகள்

மலேசிய மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் உடல் கருகி பலி

Published On 2016-10-25 13:35 GMT   |   Update On 2016-10-25 13:35 GMT
மலேசிய அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகினர்.
கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள ஜோஹோர் பஹ்ரு அரசு மருத்துவமனையில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் உடல் கருகி பலியாகினர். பலியான 6 பேரில் மூன்று பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், மருத்துவமனைக்கு உள்ளே சிக்கிக் கொண்ட 294 நோயாளிகள் மற்றும் 193 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து மலேசிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News