செய்திகள்

2 தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-10-24 21:40 GMT   |   Update On 2016-10-24 21:40 GMT
2 தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொழும்பு:

இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் கடந்த வாரம் அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 தமிழ் மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் நிற்காமல் சென்றதால் அங்கு இருந்த போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாணவர்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டியும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க கோரியும் மனு அளித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News