செய்திகள்

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் தொடர் யாகம்

Published On 2016-10-23 17:07 GMT   |   Update On 2016-10-23 17:07 GMT
சுற்றுசூழல் பற்றி உலக மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் 9 நாட்கள் தொடர் யாகம் நடத்தி வருகின்றனர்.
டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சுற்றுசூழல் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து டோக்கியோ சென்றுள்ள இந்து மத குருக்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 9 நாட்கள் தொடர் யாகம் நடத்து வருகின்றனர்.

3-வது நாளான இன்று யாகம் நடத்தினர். அதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள், இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்து மத குருக்கள் பல்வேறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

Similar News