செய்திகள்
உலகின் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஜப்பானை சேர்ந்த முதல் பெண்மணி ஜங்கோதபே புற்றுநோயால் உயிரிழந்தார்.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனை ஜங்கோதபே (77). புற்று நோயால் அவதிப்பட்ட இவர் நேற்று மரணம் அடைந்தார்.
1975-ம் ஆண்டு மே மாதம் தனது 35-வது வயதில் உலகில் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.
இவர் 2011-ம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா பகுதியை சேர்ந்தவர். புற்று நோய் பாதித்த இவர் சைடமாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜங்கோதபே சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனை ஜங்கோதபே (77). புற்று நோயால் அவதிப்பட்ட இவர் நேற்று மரணம் அடைந்தார்.
1975-ம் ஆண்டு மே மாதம் தனது 35-வது வயதில் உலகில் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.
இவர் 2011-ம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா பகுதியை சேர்ந்தவர். புற்று நோய் பாதித்த இவர் சைடமாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜங்கோதபே சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.