செய்திகள்

ஈராக் மொசூல் அருகே 284 பேரை கொன்று புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

Published On 2016-10-23 10:07 GMT   |   Update On 2016-10-23 10:07 GMT
ஈராக் மொசூல் அருகே 284 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று புதைத்தனர்.
பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரை மீட்பதில் ஈராக் மற்றும் குர்தீஸ் ராணுவத்தின் கூட்டுப்படை தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

ஈராக் கூட்டுப்படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்குகின்றனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க மொசூலை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மனித கேடயங்களாக பயன்படுத்திய 284 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று கொன்று குவித்தனர். அவர்களின் உடல்கள் மொசூல் வடக்கு பகுதியில் உள்ள விவசாய கல்லூரி வளாகத்தில் ஒரே இடத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டன.

இவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவர். இதற்கிடையே கிர்குக் பகுதியிலும், மொசூலிலும் ஈராக் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Similar News