செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ‘ஹைமா’ புயலுக்கு 12 பேர் பலி

Published On 2016-10-21 07:44 GMT   |   Update On 2016-10-21 07:44 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டை சூறையாடிய ‘ஹைமா’ புயலுக்கு 12-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணங்களை நேற்று மணிக்கு சுமார் 225 கிலோமீட்டர் வேகத்தில் ‘ஹைமா’ என்ற பெரும்புயல் தாக்கியது. புயலை தொடர்ந்து பலத்த மழையும் பெய்ததால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் சோளப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன.

நாட்டின் வடபகுதியில் வாழும் சுமார் ஒருகோடி மக்கள் இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 12 பேர் உயிரிழந்தனர்.

தீவிரம் தணிந்து மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் அருகாமையில் உள்ள ஹாங்காங் நகரை நோக்கி நெருங்கி செல்லும் ‘ஹைமா’ அங்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

Similar News