செய்திகள்
டிபிஸ் மின்சார உற்பத்தி நிலையம், ஈராக்.

ஈராக்: மின் உற்பத்தி நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - 16 பேர் பலி

Published On 2016-10-21 06:15 GMT   |   Update On 2016-10-21 06:14 GMT
ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் மீது இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 16 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்:

ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டிபிஸ் நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரானை சேர்ந்த ஒரு நிறுவனம் அமைத்து வருகிறது. இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த மின் உற்பத்தி நிலையத்துக்குள் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர்.

தங்கள் உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை அவர்கள் வெடிக்க வைத்ததில் 16-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் டிபிஸ் நகர மேயர் அப்துல்லா நூருதீன் அல்-சலேஹி தெரிவித்துள்ளார்.

Similar News