செய்திகள்
கிரிக்கெட் விளையாடியபோது தகராறு: இலங்கையில் 15 வயது சிறுவன் மட்டையால் அடித்துக்கொலை
இலங்கையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் 15 வயது சிறுவன் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொழும்பு:
இலங்கை மத்துகம பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து வீசிய 15 வயது சிறுவன் வைடாக வீசியதால், இதுதொடர்பாக அவனுக்கும் பேட்டிங் செய்த 14 வயது சிறுவனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த பேட்டிங் செய்த சிறுவன் பந்து வீசிய சிறுவனை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுவனுக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவன் அருகில் இருந்த வெட்டாவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை மத்துகம பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து வீசிய 15 வயது சிறுவன் வைடாக வீசியதால், இதுதொடர்பாக அவனுக்கும் பேட்டிங் செய்த 14 வயது சிறுவனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த பேட்டிங் செய்த சிறுவன் பந்து வீசிய சிறுவனை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுவனுக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவன் அருகில் இருந்த வெட்டாவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.