செய்திகள்

தற்போதைய சூழ்நிலையில் போர் நடந்தால் இந்திய பொருளாதாரம் அழியும்: பாகிஸ்தான் எச்சரிக்கை

Published On 2016-09-27 05:18 GMT   |   Update On 2016-09-27 05:18 GMT
தற்போதைய சூழ்நிலையில் போர் நடந்தால் இந்திய பொருளாதாரம் அழியும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத்:

தற்போதைய சூழ்நிலையில் போர் நடந்தால் இந்திய பொருளாதாரம் அழியும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு பத்திரிகையில் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் தற்போதைய சூழ்நிலையில் போர் தேவையில்லை. எங்களுக்கும் (பாகிஸ்தானுக்கும்) அந்த எணணம் இல்லை. அதே நேரத்தில் போர் நடந்தால் இந்திய பொருளாதாரம் அழியும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

Similar News