தமிழ்நாடு

பிறந்து 23 நாட்களே ஆன நிலையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்து பச்சிளம் குழந்தை பலி

Published On 2023-12-12 09:17 GMT   |   Update On 2023-12-12 09:17 GMT
  • குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சித்தாத்தா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருவேலம்முத்து. இவரது மனைவி கருவேலங்கனி.

இவர்களுக்கு கடந்த 23 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவத்தையொட்டி கருவேலங்கனி குழந்தையுடன் மீனாட்சிபட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துள்ளனர். அப்போது திடீரென குழந்தை கட்டிலில் இருந்து தவறி தரையில் விழுந்தது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கருவேலங்கனியின் குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News