தமிழ்நாடு
கோவில்பட்டி பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு
- கோவில்பட்டி சுபா நகர் பகுதியில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் உள்ளது.
- கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சுபா நகர் பகுதியில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன போகர் ஸ்ரீனிவாச பெருமாள் சிலை திருட்டு போய் உள்ளது. இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து ஐம்பொன் சிலையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.