தமிழ்நாடு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அண்ணாமலை நேரில் ஆய்வு

Published On 2023-12-06 08:10 GMT   |   Update On 2023-12-06 08:10 GMT
  • பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார்.
  • பல்வேறு விஷயங்களை அறிக்கை மூலம் வெளியிடுவதாக தெரிவித்தார்.

சென்னை:

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று நேரில் ஆய்வு செய்தார். பகல் 12 மணியளவில் வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியில் இருந்து பகுதிகளில் தனது ஆய்வை தொடங்கினார். முட்டளவு வெள்ளம் உள்ளே நடந்து சென்று செல்லும் பகுதிகளில் நடந்து சென்றார்.

அங்கு வீடுகளில் இருந்த பொதுமக்களிடம் அவர்களுக்கு தேவையான உதவிகள், ஒவ்வொரு மழை காலமும் இப்படித்தான் மழை தண்ணீர் தேங்குகிறதா? இதற்கான காரணம் என்ன? அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கிறதா? என்பதையெல்லாம் கேட்டறிந்தார். அவர்களுக்கு பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார்.

தொடர்ந்து மேற்கு சைதாப்பேட்டை, விநாயகபுரம், ஆயிரம்விளக்கு, ராயபுரம், சின்னமாத்தூர் ஆகிய பகுதிகளையும் இன்று மாலை வரை நேரில் பார்வையிடுகிறார்.

அதன் பிறகு பொதுமக்கள் கூறிய கருத்துக்கள், தண்ணீர் தேங்குவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிக்கை மூலம் வெளியிடுவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தென்சென்னை மாவட்ட தலைவர் சாய் சத்யன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.


Tags:    

Similar News