தமிழ்நாடு

சென்னையில் இன்று மாலை பா.ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அண்ணாமலை-எல்.முருகன் பேசுகிறார்கள்

Published On 2022-06-26 10:05 GMT   |   Update On 2022-06-26 10:05 GMT
  • கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் 7 கட்சி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் திரள்கிறார்கள்.

சென்னை:

மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

38 மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார்.

இதன் நிறைவு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று மாலை நடை பெறுகிறது.

இதற்காக கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 7 கட்சி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் திரள்கிறார்கள். மாலை 4 மணி அளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்குகிறது. 6 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.

மத்திய மந்திரி எல்.முருகன், சுதாகர் ரெட்டி, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை தலைவர் கரு.நாகராஜன் மாவட்ட தலைவர்கள் தனசேகர், காளிதாஸ், விஜயானந்த், மனோகரன், சாய்சத்யன், கபிலன், கிருஷ்ணகுமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News