தமிழ்நாடு

ஜி.கே.வாசனுடன் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்திப்பு

Published On 2023-01-19 06:12 GMT   |   Update On 2023-01-19 06:12 GMT
  • இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்த கட்சியிடம் தயக்கமும் இருக்கிறது.
  • ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலிலும் இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் போட்டியிட்ட யுவராஜா சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

எனவே அந்த தொகுதியை மீண்டும் த.மா.கா. கேட்டுள்ளது. அதே நேரம் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்த கட்சியிடம் தயக்கமும் இருக்கிறது.

இந்தநிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க. குழுவினர் இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News