தமிழ்நாடு

கோவையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-16 11:36 GMT   |   Update On 2022-09-16 11:36 GMT
  • ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது.
  • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை:

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.

இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News