தமிழ்நாடு

சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்

Published On 2023-12-05 14:31 GMT   |   Update On 2023-12-05 14:31 GMT
  • இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரெயில்கள் இயங்கும்.
  • அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும்.

சென்னை புறநகர் ரெயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரெயில்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர்- தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை- திருவள்ளூர்- அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி பறக்கும் ரெயில் ஆகிய வழித்தடங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும், திருவொற்றியூர்- கும்மிடிப்பூண்டி தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News